Sunday, June 14, 2020

Adi Kumbeswarar Temple, Kumbakonam – Literary Mention

Adi Kumbeswarar Temple, Kumbakonam – Literary Mention
Appar, the 7th century Tamil Saivite saint poet and Nayanar has revered Kumbeswarar and the temple in his verses in Thevaram, compiled as the Fifth Thirumurai. Thirugnana Sambandar, another famous 7th century Tamil Saivite saint poet and Nayanar has revered Kumbeswarar and the temple in his verses in Thevaram, compiled as the Third Thirumurai. Appar has glorified the temple in his hymns referring the place as Kudamukku and the deity as Kumbesar.
Sage Thirugnana Sambandar in his hymns had praised Mother as Valar Mangai. As the temple is revered in Thevaram, it is classified as Paadal Petra Sthalam, one of the 276 temples that find mention in the Saiva canon. This Temple is the 143rd Devaram Paadal Petra Shiva Sthalam and 26th sthalam on south of river Cauvery in Chozha Nadu. Lord Murugan of this Temple is praised by Saint Arunagirinathar in his revered Thirupugazh hymns.  
Thirugnana Sambandar (03.059):
அரவிரி கோடனீட
லணிகாவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவல்
மணமல்லிகை கள்ளவிழுங்
குரவிரி சோலைசூழ்ந்த
குழகன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி
யிருந்தானவன் எம்மிறையே.  1
ஓத்தர வங்களோடும்
ஒலிகாவிரி யார்த்தயலே
பூத்தர வங்களோடும்
புகைகொண்டடி போற்றிநல்ல
கூத்தர வங்களோவாக்
குழகன்குட மூக்கிடமா
ஏத்தர வங்கள்செய்ய
இருந்தானவன் எம்மிறையே.  2
மயில்பெடை புல்கியால
மணல்மேல்மட அன்னமல்கும்
பயில்பெடை வண்டுபண்செய்
பழங்காவிரிப் பைம்பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாட
லுடையான்குட மூக்கிடமா
இயலொடு வானமேத்த
இருந்தானவன் எம்மிறையே.  3
மிக்கரை தாழவேங்கை
யுரியார்த்துமை யாள்வெருவ
அக்கர வாமையேன
மருப்போடவை பூண்டழகார்
கொக்கரை யோடுபாட
லுடையான்குட மூக்கிடமா
எக்கரை யாருமேத்த
இருந்தானவன் எம்மிறையே.  4
வடிவுடை வாட்டடங்கண்
ணுமையஞ்சவோர் வாரணத்தைப்
பொடியணி மேனிமூட
வுரிகொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடமோங்குங்
குழகன்குட மூக்கிடமா
இடிபடு வானமேத்த
இருந்தானவன் எம்மிறையே.  5
கழைவளர் கவ்வைமுத்தங்
கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல
பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த
குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும்
இருந்தானவன் எம்மிறையே.  6
மலைமலி மங்கைபாகம்
மகிழ்ந்தானெழில் வையமுய்யச்
சிலைமலி வெங்கணையாற்
சிதைத்தான்புர மூன்றினையுங்
குலைமலி தண்பலவின்
பழம்வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலமேந்தி
இருந்தானவன் எம்மிறையே.  7
நெடுமுடி பத்துடைய
நிகழ்வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப்
பருமால்வரைக் கீழடர்த்தான்
கொடுமடல் தங்குதெங்கு
பழம்வீழ்குட மூக்கிடமா
இடுமணல் எக்கர்சூழ
இருந்தானவன் எம்மிறையே.  8
ஆரெரி ஆழியானும்
மலரானும் அளப்பரிய
நீரிரி புன்சடைமேல்
நிரம்பாமதி சூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட
குழகன்குட மூக்கிடமா
ஈரிரு கோவணத்தோ
டிருந்தானவன் எம்மிறையே.  9
மூடிய சீவரத்தார்
முதுமட்டையர் மோட்டமணர்
நாடிய தேவரெல்லாம்
நயந்தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லா
முடையான்குட மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி
யிருந்தானவன் எம்மிறையே.  10
வெண்கொடி மாடமோங்கு
விறல்வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்றசீரான்
தமிழ்ஞானசம் பந்தனல்ல
தண்குட மூக்கமர்ந்தான்
அடிசேர்தமிழ் பத்தும்வல்லார்
விண்புடை மேலுலகம்
வியப்பெய்துவர் வீடெளிதே.
Appar (05.022):
பூவ ணத்தவன்
புண்ணியன் நண்ணியங்
காவ ணத்துடை
யானடி யார்களைத்
தீவ ணத்திரு
நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை
யான்குட மூக்கிலே.  1
பூத்தா டிக்கழி
யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ்
சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி
தன்விசை தீர்கென்று
கூத்தா டியுறை
யுங்குட மூக்கிலே.  2
நங்கை யாளுமை
யாளுறை நாதனார்
அங்கை யாளொ
டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள்
கன்னி யெனப்படுங்
கொங்கை யாளுறை
யுங்குட மூக்கிலே.  3
ஓதா நாவன்
திறத்தை யுரைத்திரேல்
ஏதா னுமினி
தாகும் மியமுனைச்
சேதா ஏறுடை
யானமர்ந் தவிடங்
கோதா விரியுறை
யுங்குட மூக்கிலே.  4
நக்க ரையனை
நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை
வானை வணங்குநீ
அக்க ரையோ
டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை
யான்குட மூக்கிலே.  5
துறவி நெஞ்சின
ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப்
பிதற்றுமின் பித்தராய்
மறவ னாய்ப்பார்த்தன்
மேற்கணை தொட்டவெங்
குறவ னாருறை
யுங்குட மூக்கிலே.  6
தொண்ட ராகித்
தொழுது பணிமினோ
பண்டை வல்வினை
பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம்
மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை
யுங்குட மூக்கிலே.  7
காமி யஞ்செய்து
காலம் கழியாதே,
ஓமி யஞ்செய்தங்
குள்ளத் துணர்மினோ
சாமி யோடு
சரச்சுவ தியவள்
கோமி யும்முறை
யுங்குட மூக்கிலே.  8
சிரமஞ் செய்து
சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல
நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு
மற்றொழிந் தார்க்கெலாங்
குரவ னாருறை
யுங்குட மூக்கிலே.  9
அன்று தானரக்
கன்கயி லாயத்தைச்
சென்று தானெடுக்
கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு
நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கேட்
டான்குட மூக்கிலே.  10