Friday, May 26, 2023

Brahmapureeswarar Temple, Ambal – Literary Mention

Brahmapureeswarar Temple, Ambal – Literary Mention

This temple is considered as one of the shrines of the 276 Paadal Petra Sthalams glorified in the early medieval Thevaram hymns. This temple is the 171st Devara Paadal Petra Shiva Sthalam and 54th sthalam on the south side of river Cauvery in Chozha Nadu. Tirugnanasambandar had sung hymns in praise of Lord Shiva of this temple. Thirunavukkarasar had mentioned about this place in his hymns. Lord Murugan of this temple is praised by Saint Arunagirinathar in his revered Thirupugazh hymns. The temple finds mention in Periyapuranam written by Sekkizhar. Vallalar also has sung hymns in praise of Lord Shiva of this temple. The Sthala Puranam was written by Vidwan Meenakshi Sundaram Pillai. Ambar was mentioned in Sangam texts like Purananuru, Natrinai and Thivagara Nigandu.

Sambandar (03.019):

எரிதர அனல்கையில்

ஏந்தி எல்லியில்

நரிதிரி கானிடை

நட்டம் ஆடுவர்

அரிசிலம் பொருபுனல்

அம்பர் மாநகர்க்

குரிசில்செங் கண்ணவன்

கோயில் சேர்வரே.  1

மையகண் மலைமகள்

பாக மாயிருள்

கையதோர் கனலெரி

கனல ஆடுவர்

ஐயநன் பொருபுனல்

அம்பர்ச் செம்பியர்

செய்யகண் ணிறைசெய்த

கோயில் சேர்வரே.  2

மறைபுனை பாடலர்

சுடர்கை மல்கவோர்

பிறைபுனை சடைமுடி

பெயர ஆடுவர்

அறைபுனல் நிறைவயல்

அம்பர் மாநகர்

இறைபுனை யெழில்வளர்

இடம தென்பரே.  3

இரவுமல் கிளமதி

சூடி யீடுயர்

பரவமல் கருமறை

பாடி யாடுவர்

அரவமோ டுயர்செம்மல்

அம்பர்க் கொம்பலர்

மரவமல் கெழில்நகர்

மருவி வாழ்வரே.  4

சங்கணி குழையினர்

சாமம் பாடுவர்

வெங்கனல் கனல்தர

வீசி யாடுவர்

அங்கணி விழவமர்

அம்பர் மாநகர்ச்

செங்கண்நல் இறைசெய்த

கோயில் சேர்வரே  5

கழல்வளர் காலினர்

சுடர்கை மல்கவோர்

சுழல்வளர் குளிர்புனல்

சூடி யாடுவர்

அழல்வளர் மறையவர்

அம்பர்ப் பைம்பொழில்

நிழல்வளர் நெடுநகர்

இடம தென்பரே.  6

இகலுறு சுடரெரி

இலங்க வீசியே

பகலிடம் பலிகொளப்

பாடி யாடுவர்

அகலிடம் மலிபுகழ்

அம்பர் வம்பவிழ்

புகலிடம் நெடுநகர்

புகுவர் போலுமே  7

எரியன மணிமுடி

இலங்கைக் கோன்றன

கரியன தடக்கைகள்

அடர்த்த காலினர்

அரியவர் வளநகர்

அம்பர் இன்பொடு

புரியவர் பிரிவிலாப்

பூதஞ் சூழவே.  8

வெறிகிளர் மலர்மிசை

யவனும் வெந்தொழிற்

பொறிகிளர் அரவணைப்

புல்கு செல்வனும்

அறிகில அரியவர்

அம்பர்ச் செம்பியர்

செறிகழல் இறைசெய்த

கோயில் சேர்வரே.  9

வழிதலை பறிதலை

யவர்கள் கட்டிய

மொழிதலைப் பயனென

மொழியல் வம்மினோ

அழிதலை பொருபுனல்

அம்பர் மாநகர்

உழிதலை யொழிந்துளர்

உமையுந் தாமுமே.  10

அழகரை யடிகளை

அம்பர் மேவிய

நிழல்திகழ் சடைமுடி

நீல கண்டரை

உமிழ்திரை யுலகினில்

ஓதுவீர் கொண்மின்

தமிழ்கெழு விரகினன்

தமிழ்செய் மாலையே.