Friday, September 6, 2019

Vedagiriswarar Temple, Thirukalukundram – Literary Mention

Vedagiriswarar Temple, Thirukalukundram – Literary Mention
Vedagiriswarar, the Lord of the Hill Temple, has been praised in song and verse by the four great Tamil Saints; Thirugnana Sambandar, Tirunavukkarasar, Sundaramurti and Manikkavasakar. These four Nayanmars have visited the temple complex. A shrine, Naalvar Koil, is dedicated to them is located nearby. This Shiva Sthalam is the 28th Devaram Paadal Petra Sthalam in Thondai Nadu. It is also considered as Thiruvasaga Sthalam.
Saint Arunagirinathar had praised Lord Murugan of this Temple in his Thirupugazh Hymns. Pattinatthar, Ramalinga Vallalar, Thiruporur Chidambaram Swamigal, Anthagakavi Veeraragava Mudaliar, Ramanathapuram Somasundaram Pillai, Kanchipuram Mahavidwan Sabapathi Mudaliar are the other saints have sung the praise of this Sthalam.
01.103 தோடுடை யானொரு (Thirugnana Sambandar):
தோடுடை யானொரு காதில் தூய குழைதாழ
ஏடுடை யான்த லைகல னாக இரந்துண்ணும்
நாடு டையான் நள்ளிருள் ஏம நடமாடும்
காடு டையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.  1
கேணவல்லான் கேழல்வெண் கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடை மேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள் தன்னை யொருபாகம்
காணவல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.  2
தேனகத்தார் வண்டது வுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதி சூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத் தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.  3
துணையல்செய்தான் தூயவண்
டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல்
லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின்
மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்
கோயில் கழுக்குன்றே.  4
பையுடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறை சூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற் றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.  5
வெள்ள மெல்லாம் விரிசடை
மேலோர் விரிகொன்றை
கொள்ள வல்லான் குரைகழ
லேத்துஞ் சிறுத்தொண்டர்1
உள்ள மெல்லாம் உள்கிநின்
றாங்கே உடனாடும்
கள்ளம் வல்லான் காதல்செய்
கோயில் கழுக்குன்றே.
பாடம் : 1சிறுதொண்டர்  6
இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்து போயிற்று.  7
ஆதல் செய்தான் அரக்கர்தங் கோனை யருவரையின்
நோதல் செய்தான் நொடிவரை யின்கண்2 விரலூன்றிப்
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோ டொருபாகம்
காதல் செய்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.
பாடம் : 2நொடியளவில்  8
இடந்த பெம்மான் ஏனம தாயும் அனமாயும்
தொடர்ந்த பெம்மான் தூமதி சூடி வரையார்தம்
மடந்தை பெம்மான் வார்கழ லோச்சிக் காலனைக்
கடந்த பெம்மான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.  9
தேய நின்றான் திரிபுரங் கங்கை சடைமேலே
பாய நின்றான் பலர்புகழ்ந் தேத்த வுலகெல்லாம்
சாய நின்றான் வன்சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.  10
கண்ணுதலான் காதல்செய் கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடிய பத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவ ரோடும் புகுவாரே.  11
06.092 மூவிலைவேற் கையானை (Thirunavukkarasar):
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  1
பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்
பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்
சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  2
இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  3
இப்பதிகத்தில் 4-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  4
இப்பதிகத்தில் 5-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  5
இப்பதிகத்தில் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  6
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7
இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  10
07.081 கொன்று செய்த கொடுமை (Sundarar):
கொன்று செய்த கொடுமை
யாற்பல சொல்லவே
நின்ற பாவம் வினைகள்
தாம்பல நீங்கவே
சென்று சென்று தொழுமின்
தேவர் பிரானிடங்
கன்றி னோடு பிடிசூழ்
தண்கழுக் குன்றமே 1
இறங்கிச் சென்று தொழுமின்
இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன்
எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள்
நித்திலங் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித்
தண்கழுக் குன்றமே.  2
நீள நின்று தொழுமின்
நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள்
அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய
மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையுந்
தண்கழுக் குன்றமே.  3
வெளிறு தீரத் தொழுமின்
வெண்பொடி ஆடியை
முளிறி லங்குமழு வாளன்
முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப்
பெய்ம்மதம் மூன்றுடைக்
களிறி னோடு பிடிசூழ்
தண்கழுக் குன்றமே.  4
புலைகள் தீரத் தொழுமின்
புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப் படையன்
எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக்
குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில்
தண்கழுக் குன்றமே.  5
மடமு டைய அடியார்
தம்மனத் தேஉற
விடமு டைய மிடறன்
விண்ணவர் மேலவன்
படமு டைய அரவன்
றான்பயி லும்மிடங்
கடமு டைய புறவில்
தண்கழுக் குன்றமே.  6
ஊன மில்லா அடியார்
தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்ட
மாடிநவி லும்மிடந்
தேனும் வண்டும் மதுவுண்
டின்னிசை பாடியே
கான மஞ்ஞை உறையுந்
தண்கழுக் குன்றமே.  7
அந்த மில்லா அடியார்
தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி
மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள்
நித்தலுஞ் சேரவே
கந்தம் நாறும் புறவில்
தண்கழுக் குன்றமே.  8
பிழைகள் தீரத் தொழுமின்
பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன்
றானுறை யும்மிடம்
மழைகள் சாலக் கலித்து
நீடுயர் வேயவை
குழைகொள் முத்தஞ் சொரியுந்
தண்கழுக் குன்றமே.  9
பல்லில் வெள்ளைத் தலையன்
றான்பயி லும்மிடம்
கல்லில் வெள்ளை அருவித்
தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள்
ஊரன் வனப்பினாற்
சொல்லல் சொல்லித் தொழுவா
ரைத்தொழு மின்களே.  10