Sunday, October 10, 2021

Rathnagiriswarar Temple, Thirumarugal – Appar Hymns

Rathnagiriswarar Temple, Thirumarugal – Appar Hymns

05.088:

பெருக லாந்தவம்

பேதைமை தீரலாந்

திருக லாகிய

சிந்தை திருத்தலாம்

பருக லாம்பர

மாயதோ ரானந்தம்

மருக லானடி

வாழ்த்தி வணங்கவே.  1

பாடங் கொள்பனு

வற்றிறங் கற்றுப்போய்

நாடங் குள்ளன

தட்டிய நாணிலீர்

மாடஞ் சூழ்மரு

கற்பெரு மான்றிரு

வேடங் கைதொழ

வீடெளி தாகுமே.  2

சினத்தி னால்வருஞ்

செய்தொழி லாமவை

அனைத்தும் நீங்கிநின்

றாதர வாய்மிக

மனத்தி னால்மரு

கற்பெரு மான்றிறம்

நினைப்பி னார்க்கில்லை

நீணில வாழ்க்கையே.  3

ஓது பைங்கிளிக்

கொண்பால் அமுதூட்டிப்

பாது காத்துப்

பலபல கற்பித்து

மாது தான்மரு

கற்பெரு மானுக்குத்

தூது சொல்ல

விடத்தான் தொடங்குமே.  4

இன்ன வாறென்ப

துண்டறி யேனின்று

துன்னு கைவளை

சோரக்கண் நீர்மல்கும்

மன்னு தென்மரு

கற்பெரு மான்றிறம்

உன்னி யொண்கொடி

உள்ள முருகுமே.  5

சங்கு சோரக்

கலையுஞ் சரியவே

மங்கை தான்மரு

கற்பெரு மான்வரும்

அங்க வீதி

அருகணை யாநிற்கும்

நங்கை மீரிதற்

கென்செய்கேன் நாளுமே.  6

காட்சி பெற்றில

ளாகிலுங் காதலே

மீட்சி யொன்றறி

யாது மிகுவதே

மாட்சி யார்மரு

கற்பெரு மானுக்குத்

தாழ்ச்சி சாலவுண்

டாகுமென் தையலே.  7

நீடு நெஞ்சுள்

நினைந்துகண் ணீர்மல்கும்

ஓடு மாலினோ

டொண்கொடி மாதராள்

மாட நீண்மரு

கற்பெரு மான்வரிற்

கூடு நீயென்று

கூட லிழைக்குமே.  8

கந்த வார்குழல்

கட்டிலள் காரிகை

அந்தி மால்விடை

யோடுமன் பாய்மிக

வந்தி டாய்மரு

கற்பெரு மானென்று

சிந்தை செய்து

திகைத்திடுங் காண்மினே.  9

ஆதி மாமலை

அன்றெடுத் தானிற்றுச்

சோதி யென்றலுந்

தொல்லருள் செய்திடும்

ஆதி யான்மரு

கற்பெரு மான்றிறம்

ஓதி வாழ்பவர்

உம்பர்க்கும் உம்பரே.